கலாசாரம்

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் பறைசாற்றும் ஆயக்கலைகள் பல. அவற்றில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளைச் சிறுவர்களுக்கு சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ‘கேம்ப் வெற்றி’ எனும் சிறுவர் முகாம் அறிமுகப்படுத்தியது. 
‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
கலாசாரத்தின் புரிந்துணர்வில் அடங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று உணவு. நூலகங்களிலும் புத்தகங்களிலும் இல்லாத கதைகளை நாம் சுவைத்து ரசிக்கும் உணவினில் காணலாம். கலாசாரத்தின் புரிந்துணர்வு எப்படி நாம் உண்ணும் உணவில் உள்ளது என அறிந்துகொள்வோம்.  
வேலை கலாசாரம் இன்றைய நவீன யுகத்தில் கணிசமான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், இளம் தொழில் நிபுணர்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் மாறிவரும் சமூக வழக்கங்களாலும் வேலையிடத்தில் நீக்குப்போக்குத் தன்மை இருப்பது முக்கியம் என்றும் இளம் தலைமுறையினர் கருதுகின்றனர். அதனால், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தங்களது வாழ்க்கைத்தொழிலுக்கும் இடையே சமநிலை காணும் வேலைச் சூழல்களை நாடுகின்றனர். இதுகுறித்து, அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய அங்கீகாரமான கலாசாரப் பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன், ‘நீங்கா நினைவலைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.